ரிஷப ராசி – மிருகசிரிஷம் 1,2 ம் பாதங்கள்




ரிஷப ராசி – மிருகசிரிஷம்  1,2 ம் பாதங்கள்
திறமையும் விசாலமான புத்தியும் யாத்திரைகளில் பற்றும் மன அழுத்தமும் முன் கோபமும் உள்ள தங்கள் நட்சத்திர நாயகன், தங்கள் ராசிக்கு 7, 12 செவ்வாய் உடன் 9,10, க்குரிய சனி பகவான் இணைந்து பார்வையும், வக்ர பார்வையும், இணைந்து தங்கள் ராசிக்கு 4 ம் இடத்தை பார்ப்பதன் வாயிலாக தங்கள் இருக்கின்ற இருப்பிடம், உத்தியோக ஸ்தானங்களில் பிரச்சினைகளும், சங்கடங்களும், இடமாற்றங்களும், ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. தசமி திதியில் பிறந்த அன்பர்களுக்கு தீடீர் தனயோகம் கிடைக்கப் பெறும். கிருத்திகை திதி,  சஷ்டி திதி, நவமி திதி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியிலும், தாயார் வழியிலும் மிகப்பெரிய நன்மைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குனி மாதம் ஒரு சிலருக்கு சரும நோயால் பாதிப்பு ஏற்படும். சனி திசை, செவ்வாய் திசை, சனி புத்தி, செவ்வாய் புத்தி நடைபெறும் நபர்ககளுக்கு பிறப்பு, மார்பு உறுப்பில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்திட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6-7 மணியளவில் சிவன் சன்னதியில் தனித்து இருக்கின்ற சூர்ய பகவானுக்கு நெய் விளக்கும், தாமரைப்பூவை சமர்ப்பணம் செய்து அதன் பின் நவகிரங்களில் உள்ள கேது பகவானுக்கு, நெய் விளக்கேற்றி சிறப்பு அர்ச்சனை செய்ய மிகப்பெரிய நன்மைகள் அடைந்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.
பெண்கள்
புதிய தொழில் வேலைவாய்ப்புகள் அமையும். அரசு வழியில் உதவிகள் பெறுவீர்கள். சாலைப் போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். சமையலறையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மருத்துவத்தில் குணம் அடையும். தங்கள் எதிர்பார்கின்ற காரியங்கள் தடை தாமதம் ஏற்படக்கூடும். எப்பொழுதும் சட்டென்று பேசும் தங்கள் கோபத்தையும் வார்த்தையில் நிதானமும் தேவை. இறைவன் தூக்கக் குறைபாடு ஏற்படலாம். எனவே தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ அனுமானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு பண்டங்கள் தானம் அளிப்பதும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் சன்னதியில் வைத்து வளையல் தானம் செய்ய மிக அரிய பயன் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த அபூர்வமாக இணைப்பில் ஏற்படக்கூடிய தர்க்கங்கள் ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் நினைவில் நிற்கக்கூடிய விதமாக அமையும். தங்களுக்கு சுய ஜாதகத்தை பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ள சிறப்புகள் பெறுவீர்கள்.
பரிகாரஸ்தலங்கள்
பிரம்மன் வழிபட்ட மகாதேவலிங்கள் உள்ள நன்னிலம் மதுவனசேத்திர திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் சென்று சூரியன் அகத்தியரும் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலம். தாங்களும் சென்று வழிபட்டு பயன் பெறுவீர்கள்.



திறமையும் விசாலமான புத்தியும் யாத்திரைகளில் பற்றும் மன அழுத்தமும் முன் கோபமும் உள்ள தங்கள் நட்சத்திர நாயகன், தங்கள் ராசிக்கு 7, 12 செவ்வாய் உடன் 9,10, க்குரிய சனி பகவான் இணைந்து பார்வையும், வக்ர பார்வையும், இணைந்து தங்கள் ராசிக்கு 4 ம் இடத்தை பார்ப்பதன் வாயிலாக தங்கள் இருக்கின்ற இருப்பிடம், உத்தியோக ஸ்தானங்களில் பிரச்சினைகளும், சங்கடங்களும், இடமாற்றங்களும், ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. தசமி திதியில் பிறந்த அன்பர்களுக்கு தீடீர் தனயோகம் கிடைக்கப் பெறும். கிருத்திகை திதி,  சஷ்டி திதி, நவமி திதி, திரியோதசி திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியிலும், தாயார் வழியிலும் மிகப்பெரிய நன்மைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பங்குனி மாதம் ஒரு சிலருக்கு சரும நோயால் பாதிப்பு ஏற்படும். சனி திசை, செவ்வாய் திசை, சனி புத்தி, செவ்வாய் புத்தி நடைபெறும் நபர்ககளுக்கு பிறப்பு, மார்பு உறுப்பில் நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சதுர்த்தி திதியில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்புகள் ஏற்படும். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்திட ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6-7 மணியளவில் சிவன் சன்னதியில் தனித்து இருக்கின்ற சூர்ய பகவானுக்கு நெய் விளக்கும், தாமரைப்பூவை சமர்ப்பணம் செய்து அதன் பின் நவகிரங்களில் உள்ள கேது பகவானுக்கு, நெய் விளக்கேற்றி சிறப்பு அர்ச்சனை செய்ய மிகப்பெரிய நன்மைகள் அடைந்து மகிழ்ச்சி பெறுவீர்கள்.
பெண்கள்
புதிய தொழில் வேலைவாய்ப்புகள் அமையும். அரசு வழியில் உதவிகள் பெறுவீர்கள். சாலைப் போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். சமையலறையில் கவனம் தேவை. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மருத்துவத்தில் குணம் அடையும். தங்கள் எதிர்பார்கின்ற காரியங்கள் தடை தாமதம் ஏற்படக்கூடும். எப்பொழுதும் சட்டென்று பேசும் தங்கள் கோபத்தையும் வார்த்தையில் நிதானமும் தேவை. இறைவன் தூக்கக் குறைபாடு ஏற்படலாம். எனவே தாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸ்ரீ அனுமானுக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவு பண்டங்கள் தானம் அளிப்பதும் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் சன்னதியில் வைத்து வளையல் தானம் செய்ய மிக அரிய பயன் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த அபூர்வமாக இணைப்பில் ஏற்படக்கூடிய தர்க்கங்கள் ஒவ்வொரு நபருடைய வாழ்க்கையிலும் நினைவில் நிற்கக்கூடிய விதமாக அமையும். தங்களுக்கு சுய ஜாதகத்தை பரிசீலனை செய்து உரிய பரிகாரங்களை மேற்கொள்ள சிறப்புகள் பெறுவீர்கள்.
பரிகாரஸ்தலங்கள்
பிரம்மன் வழிபட்ட மகாதேவலிங்கள் உள்ள நன்னிலம் மதுவனசேத்திர திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் சென்று சூரியன் அகத்தியரும் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலம். தாங்களும் சென்று வழிபட்டு பயன் பெறுவீர்கள்.

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்