கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்




உயர்ந்த கம்பீரமான தோற்றத்துடனும், திடமனதுடன், கோப குணங்களுடன், செல்வமும், செல்வாக்கும் பிறரின்  வழிகாட்டுதலின் உதவியால் பெற்ற வருமானமும் காரியவாதியான தாங்கள் இதுவரை கடந்த வந்த பாதை.
சூழ்ச்சியான புத்தி சாதுர்யத்தால் பண வரவுகளும், காரிய வெற்றியும், அடைந்தீர்கள். தந்தை வழி மூலமாக சில சங்கடங்களை எதிர்நோக்கி இருப்பீர்கள். தங்களின் வாதத்தின் காரனமாக சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கும். குடும்ப நிலைகளில் சில குழப்பங்களும், வாதிப் பிரதிவாதங்களும் சுவையற்ற சுழல் ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு இருக்கலாம். இந்த ½ வருட காலங்களுக்கு மேலாக மேற்கண்ட பலன்கள் நடைபெற்று இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய சிறிய வெற்றியின் மூலமாக கிடைத்த லாபத்தை ஆராயாமல் முதலீடு செய்து சங்கடப்பட்டு கொண்டிடுபீர்கள். மற்றவர் காரியத்துக்கு நாம் செல்லும் போது வெற்றி கிடைக்கிறது. என் சுய வேலையின் காரணமாக, தொழில் நிமிர்த்தமாக எடுக்கின்ற முயற்சிகள் முதல் முறையே விரக்தியே  காணப்படுகிறதே என்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள தங்களுக்கு இந்த சனி, செவ்வாய் சேர்க்கைக்குரிய பலன்கள்.
அவிட்டம், நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்து குறிப்பாக அவிட்டம் நட்சத்திரம், 4 ம் பாதத்தில் மட்டும் பிறந்தவர்களுக்கு மட்டும் வெளிநாட்டு தொழில் வர்த்தக ரீதியின் மூலமாக கனிமப் பொருள்களின் மூலமாக ஒரு உன்னத லாபத்தை அடைவீர்கள். அதே சந்தர்பத்தில் தங்கள் உடல் நிலையில் கால் பகுதியில் மருத்துவ சிகிச்சை செய்ய சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக ராகு திசை நடைபெறும் இளம் வயது நண்பர்களுக்கு இந்த அவிட்டம் நட்சத்திரம், 3, 4  பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதிய உறவுகள் மலரும். புதிய தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் செய்யும் இடமானது தங்கள் பிறந்த இடத்தில் இருந்து 100 கி.மீ. க்கு அப்பால் கிடைக்கப்பெற்றால், நிலையான மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்கும். குரு திசை, குரு புத்தி, நடைபெருபவர்கள். தங்கள் இருக்கும் பதவிகள் அல்லது மனவருத்தம் வரக்கூடிய அவமானங்கள் பதவி இறக்கம் போன்ற அபசுப பலன்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக திருச்சோற்றுத்துறை, சோற்றுத்துறை நாதர் திருக்கோவில், திருச்சோற்றுத்துறை, அஞ்சல் வழி கண்டியூர். எஸ் ஒ திருவையாறு வட்டம், தஞ்சை மாவட்டம். 613202.
செல்லும் வழி திருவையாற்றிருந்தும் செல்லலாம். கண்டியூரிலிருந்தும் சாலை உள்ளது. ஆற்று அருகே உள்ள வளைவில் இடப்புறம் திரும்பவும். குடமுருட்டியாற்றின் கரையில்.
தொடர்புக்கு அன்னபூரணி உடனுறை, ஓதவனேஸ்வர் காலை 10.00 – 11. 00

செவ்வாய் புத்தி, சனி புத்தி நடைபெறுபவர்கள் தாங்கள்சந்திக்கின்ற சுழல்கள் தங்களை அவமரியாதை செய்வது போன்றும், கோபம் மூட்டகூடியதாகவும், தங்கள் தொழில் நிமிர்த்தமாக ஏற்படும் முயற்சிகளில் பின்னடைவும், முரண்பாடான வாதிப் பிரதிவாதம் மட்டுமல்லாது புதிய நண்பர்களுடைய ஆலோசனையின் பெரில் சில சங்கடங்கள் ஏற்படும். இது விபரீதமான இயற்கையாகவே  1 ½ மாதம் இணைந்து பிரிகின்ற கிரகனங்கள்  40 ஆண்டுகளுக்கு   பிறகு 6 ½ மாதங்கள் இணைந்து செயல்பட்டு உங்களை பரிசோதிக்கக் காத்துக் கொண்டு இருக்கின்றன. இக்காலகட்டத்தில் பயம் கொள்ளது முக்கிய முடிவுகள் இக்காலகட்டங்களில் எடுப்பதை தவிர்த்து சற்று கவனமுடன் இருக்க வேண்டிய காலம்.
பரிகாரங்கள்
அவிட்டம் நட்சத்திரம் 4 ம் பாதம்
வெள்ளிக்கிழமையில் காலை 8.20 முதல் 8.50 வரை உள்ளான காலங்களில் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கின்ற அம்மன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட நன்மை கிடைக்கும்.
2. அவிட்டம் நட்சத்திரம் 4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் திங்கள்கிழமை 9.20 முதல் 9.50 வரையிலான காலத்தில் நவக்கிரகங்களில் இருக்கின்ற ஸ்ரீ செவ்வாய் பகவானுக்கு வஸ்திரம் அணிவித்து உரிய பூஜை முறைகள் செய்தால் நன்மை கிடைக்கும்  தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்