பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி



பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசி
பந்துக்கள், நண்பர்களால் போற்றப்படும் குணமும், தொழிலில் கீர்த்தியும் வாக்கு நாணயமும் கொண்டவரும் மற்றவரினுடைய செயலுக்கும், வாழ்க்கைக்கு, வழி காட்டியாக காணப்படும் தங்கள், தங்களுடைய வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை போராடி, போராடி பெற்று இருப்பீர்கள். இரட்டிப்பான மனசஞ்சலம் உள்ள தங்கள் கடந்து வந்து சுழல். கடந்த 1 ½ வருட காலங்களாக மிகப்பெரிய முயற்சிகள் மேற்கொண்ட போதும், சுய காரியங்களை மட்டுமல்லாது தொழில் நிலையங்கள் மட்டுமல்லாது தொழில் நிலையங்களில் ஏற்பட்டு இருக்கின்ற மந்த நிலைகளும், தடுமாற்றங்கள் பெரும் முதலீடுடன் ஏற்படுத்திய சரிவும், காணப் பெற்றது. ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி இருக்கலாம். ஒரு சிலர் வம்பு வழக்குகள் மூலமாக நீதிமன்றங்களில் நிற்க வேண்டி இருக்கலாம். குறிப்பாக   சுக்ர புத்தி நடைபெற்று கொண்டு இருந்தவர்கள் பெண் வழி பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். தந்தை வழியில் செலவினங்களை சந்தித்து இருப்பீர்கள். தந்தை வழி சொத்துக்கள் மூலமாக சில சட்ட சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள்.
சனி, செவ்வாய் சேர்க்கை பலன்கள்
தங்களுடைய ராசிக்கு 2, 9 க்குரியவரும் 11, 12 க்குரிய சனி பகவானும் நேரடி பகைப் பெற்ற கிரகங்கள் இணைந்து தங்களுடைய ராசிக்கு 9ம் இடத்தில் வக்ரம் பெற்று சேர்ந்து செயல்படுகின்ற காலமானது ஒரு வித்தியாசமான தங்கள் இதுவரை கண்டிராத புதிய பாதையை காணப் போகிறீர்கள். எப்பொழுதும், துடுக்க்காகவும், மிடுக்காகவும், இருக்கும் தாங்கள் இக்கால கட்டத்தில் மௌனமாக இருந்தால் மகிழ்ச்சியோடு  இருக்கலாமே. தந்தைக்கு அறுவை சிகிச்சை சேயும் சூழல் ஏற்படலாம். தந்தை வழி உறவினர்களிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு தீரும். ஆன்மிக வழி செலவினங்கள் செய்யக்கூடிய சுழல் ஏற்படும். (கோயில் கட்டுதல், மண்டபம் கட்டுதல், அபிவிருத்தி செய்தல் போன்ற செயல்கள் ஏற்படும்) தங்களுடைய வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டு இருகின்ற பிரச்சனைகளுக்கு மிகுந்த கவனம் தேவை. தொழில் நிமிர்த்தமாக, அவசரத்திற்காக அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெற ஒரு பொன்னான வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அதில் பயனடையும் பொருட்டு கிருத்திகை திதி, நவமி திதி, திரயோதசி திதி, இத் திதி வருகின்ற நாளில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள் நாகலிங்க சுவாமிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டு மிகப் பெரிய ஒரு உன்னதமான சிறப்பைப் பெற ஒரு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தங்களுடைய மூத்த சகோதர சகோதரிகளிடைய வார்த்தையில் கருத்து மோதல்கள் பெரிது படுத்தாமல் அவர்களுக்கு சிறப்பற்ற காலமான இக்காலத்தில் அமைதி காத்துவந்தால் இந்த சனி செவ்வாய் சேர்க்கைக்கான காலத்திற்கு பிறகு நன்மை ஏற்படும். சுக்ர புத்தி, சுக்ர திசை,நடைபெறுகின்ற நபர்கள் கட்டிய பழைய வீடு வாங்கும் யோகம் அமையும். சில கடன்களும் ஏற்படும்.
பரிகாரங்கள்
குடந்தை காரோணம், சோமேசர் திருக்கோவில், கும்பகோணம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612001. கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தின் கீழக்கரையில் கோவில் அய்யாவாடி 4 கி.மி. தூரத்தில் உள்ளது.
தல வரலாறு
மகாசங்கர காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம் காரோணம். அம்பிகை இறைவன் திருமேனியை ஆரோகணித்த ஸ்தலம். இராமன் இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி ஆரோகனிக்கப் பட்டதால் காய ஆரோகணம்  என்று காசி விசுவேசம் கோயிலை சிலர் சொன்னாலும் ஞான சம்பந்தர் பாடல் பெற்றது. இத் தலமே வியாழன் சந்திரன் வழிபட்டது. சோமசுந்தரி உடனுறை. சோமேஸர். 06.00 – 12.00
தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்