மீனராசி ரேவதி நட்சத்திரம்



மீனராசி ரேவதி நட்சத்திரம்
எளிமையான வாழ்க்கையை வாழ்பவரும், கல்விமான், தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பவரும், எந்த ஒரு செயலிலும், காரியங்களிலும் இரு பக்கங்களையும் காண்பவரும், செயல் தடுமாற்றங்கள் உள்ளவரும், தன் செயல், தன்னுடைய புத்தி சாதுர்யமே தனக்கு எதிராக உணர்ந்தவரும் ரேவதி 1,2 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எக்கலையும், கற்கும் திறன் உடையவருமான தாங்கள் கடந்து வந்த பாதை கடந்த 11 மாதத்திற்கு முன்பாக புதிய நட்புகள் மூலமாக புதிய வழிகள் மூலமாக, கூட்டுதொழில் மூலமாக வருமானங்கள் ஈட்டி வந்திருப்பீர்கள். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி இருக்கலாம். ஆன்மிக ரீதியான பயணங்களை மேற்கொண்டு இருப்பீர்கள். தங்களுடைய உழைப்பால் கிடைக்கக் கூடிய லாபங்களும், தற்காத்துக் கொள்ள வழி இல்லாத சுழல் ஏற்பட்டது. தாயார் வழி மூலமாக வரவுகளும், லாபங்களும் பெற்று இருக்கலாம். அடுத்து வந்த கால கட்டங்களில் தங்களுடைய சுப விரயங்கள் ஏற்பட்டு இருக்கலாம். தொழில் நிமிர்த்தமாக அலைச்சல்களும், தொழில் மாற்றங்களும், கடன் பெற்று இருப்பீர்கள். தற்போது செவ்வாய், சனி சேர்க்கைக்கான பலன்கள்.
குடும்ப ரீதியான பண செலவுகளும், குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சுழலும் ஏற்படலாம். இந் நட்சத்திரகாரர்களுக்கு தந்தை வழி மூலமாக நன்மைகள் கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கப்பெறும். பதவி உயர்வுகள் குடும்பத்தை விட்டு நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். லாபத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு லாபத்தையும், செலவினங்களையும், சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து பெற வேண்டும். தங்களுடைய ராசி நாதனும், நட்சத்திர நாதனும் வலுவற்ற சூழ்நிலையில் கோச்சார சஞ்சாரம் பெற்றிருப்பதால் திடமான முடிவுகள் எடுப்பதில் குழப்பங்கள் காணப்படும். அரசியல் துறையினர் உங்களுடைய கருத்து மாறுபட்ட உள்ள சுழல் உள்ள நண்பர்களிடம் இருந்து மறைமுகமான நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள். விஷ ஜந்துகள் (பூச்சிகள், நாய், பூனை, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந் நட்சத்திரத்தில்  பிறந்து கிருத்திகை திதி, நவமி திதி, திரியோதசி திதி, சஷ்டி திதி யில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். (லாட்டரி, ஷேர் மார்க்கெட்) வணிகங்கள் மூலமாக பெருத்த லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைக்கு மருத்துவச் செலவீனங்கள் ஏற்படலாம். இளைய சகோதர சகோதரிகளுக்கு விபத்தின் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். தான் பெற்ற கல்வியையும், அனுபவத்தையும் உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் தனக்குரிய அங்கீகாரங்களும், லாபங்கள் கிடைக்கப் பெறாமல் அடிமனதில் எப்பொழுதுமே எண்ணங்கள் மீண்டும்மீண்டும் எழும் ரேவதி நட்சத்திரகாரர் களான தாங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், உரிய அங்கீகாரமும் கிடைக்கப் பெற ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், 01.20 முதல்  01.50 க்கு உள்ளாக ஆறு கண் தெரியாத பிராமணர்களுக்கு அல்லது. கண் தெரியாத ஏழைகளுக்கு வஸ்திரம் அளித்து வந்தால் தங்கள் வாழ்க்கையில் நன்மைகள் பெறுவதை உணர்வீர்கள். குறிப்பு பிராமணர்களுக்கு செய்வது உத்தமம். இந்த செவ்வாய், சனி சேர்க்கையின் காலங்களில் நடைபெற உள்ள பண முடக்கம், குடும்ப செலவுகள், அபசுப செலவுகள், பெயருக்கு கலங்கம்ஏற்படுவது போன்றவற்றை தவிர்க்கும் பொருட்டு ஸ்ரீ ரங்கம் சென்று தங்கள் பிறந்த நட்சத்திரதன்று அல்லது தசமி திதி யன்று ஸ்ரீ ரங்கநாதருக்கு வைரக் கிரிடம் சாத்தி நெய்வேத்தியம் செய்து வழிபட இயற்கை தீய கிரகங்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடுகின்ற சூரியன், செவ்வாய், ராகு, கேது கிரகங்கள் கூட்டணி அமைத்து நன்மை சோதிக்கும் தருவாயில் இவ் வழிபாடு முறை நமக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தையும், சாபமே வரமாக மாறியது போல நன்மை கிடைக்கும். தங்களின் சுய ஜாதகத்தை பரிசிலனை செய்து பரிகாரங்கள் செய்ய 9442156790 தொடர்பு கொள்ளவும்.  myathistam@gmail.com

Comments

Popular posts from this blog

கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் 3, 4 பாதம்

தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 1 ம் பாதம்

கடக ராசி பூசம் நட்சத்திரம்